top of page

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி

  • ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் திரண்டனர்.

  • டெல்லி எம்.சி.ஆர். பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Farmers Struggle  Farmers  Rally
Farmers Struggle Farmers Rally

புதுடெல்லி:

  • புதிய வேளாண் சட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, சலுகைகள் வழங்க வேண்டும், நிலமற்ற விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் மறுவாழ்வு பலன்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

  • நொய்டாவில் உள்ள மகாமாயா மேம்பால பகுதியில் இருந்து டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி பிற்பகல் தொடங்குகிறது. பாரதீய கிஸான் பரிசத் அமைப்பு, கிசான் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

  • இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக கவுதம் புத்தநகர், அலிகார் மற்றும் ஆக்ரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரகணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் திரண்டனர்.

  • விவசாயிகள் போராட்டத்தையொட்டி டெல்லி எம்.சி.ஆர். பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து பல்வேறு இடங்களில் மாற்றி விடப்பட்டுள்ளது.

  • முக்கிய சாலைகளில் சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

#Farmers Struggle #Farmers Rally

Comments


bottom of page