top of page

குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வரும் காட்டுப்பன்றிகள்- பொதுமக்கள் அச்சம்

  • சாலைகளில் காட்டு பன்றி ஒன்று தனது குட்டியுடன் உலா வந்தது.

  • குடியிருப்பு பகுதியை ஒட்டி வனப்பகுதி உள்ளது.

    Public   Wild boars
    Public Wild boars

    அரூர்:

  • தருமபுரி மாவட்டம், அரூர் நகர பகுதியிலான திருவிக நகர், கோவிந்தசாமி நகர் ஆகிய குடியிருப்பு பகுதியை ஒட்டி வனப்பகுதி உள்ளது.

  • இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சாலைகளில் குட்டிகளுடன் உலா வந்த வண்ணம் உள்ளன.

  • அதனை தொடர்ந்து நேற்று இரவும் திருவிக நகர், கோவிந்தசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் காட்டு பன்றி ஒன்று தனது குட்டியுடன் உலா வந்தது.

  • அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனத்தை இயக்கி சென்றனர். எனவே ஊருக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    #Public #Wild boars #Tamilpublicnews

Comments


bottom of page