top of page

முதுநிலை மருத்துவ படிப்பில் மாணவர்களை சேர்க்க தனியார் மருத்துவ கல்லூரி மறுப்பு- அரசு செயலர் எச்சரிக்கை

  • அரசு மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீடாக 28 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டது.

  • மாணவர்களை சேர்க்காத மருத்துவ கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

Medical Study
Medical Study
  • புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள எம்.டி., எம்.எஸ்., மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு புதுச்சேரி அரசின் சென்டாக் மூலம் கடந்த 26-ந் தேதி முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கீடு செய்தது.

  • அரசு மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீடாக 28 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டது அதுபோல் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் அரசு ஓதுக்கீடாக 64 இடங்கள் ஒதுக்கப்பட்டது.

  • இம்மாணவர்கள் நவ. 27-ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை சீட் கிடைத்த கல்லூரியில் சேர அறிவுறுத்தப்பட்டனர்.

  • அதன்படி தனியார் மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு சீட் கிடைத்த 64 மாணவர்கள் சேர முற்பட்டபோது, அந்த கல்லூரி நிர்வாகம் மாணவர்களை சேர்க்க மறுத்துவிட்டது.

  • எங்களுடைய கல்லுாரி சிறுபான்மையினர் கல்லூரி என்பதால் 50 சதவீதம் தர விருப்பம் இல்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் எனவே இம்மாணவர்களை சேர்க்க முடியாது என அக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துவிட்டது.

  • இதனால் கொந்தளிப்பு அடைந்த மாணவர்கள், பெற்றோர் சங்கங்களுடன் சென்டாக் வளாகத்தில் திரண்டனர். அவர்களிடம் சென்டாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  • சிறுபான்மை கல்லூரி வழக்கு தொடர்ந்துள்ளது உண்மை தான். ஆனால் மாணவர் சேர்க்கைக்கு எந்த இடைக்கால தடையும் இல்லை. இதனால் தான் சென்டாக் மூலமாக மாணவர்கள் சேர்க்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதை தொடர்ந்து, சுகாதார துறை செயலர் முத்தம்மாவிடம் பெற்றோர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று முறையிட்டனர்.

  • கவுன்சிலிங் விதிமுறைகளின்படி, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். மாணவர்களை சேர்க்காத மருத்துவ கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என அரசு செயலர் முத்தம்மா எச்சரிக்கை விடுத்தார். அதையேற்று மாணவர்கள், பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

    #Medical Study

Comments


bottom of page