top of page

மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியில் நடைபெற்ற `பூம்புகார்' கைத்திறன் போட்டி

  • கைவினைக் கலைஞர்கள் கைத்திறன் போட்டியை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

  • வெற்றி பெரும் மாணவ, மாணவியருக்கு, தலா 2,000 ரூபாய் ரொக்க பரிசு.

Mamallapuram   College of sculpture    Handicraft competition
Mamallapuram College of sculpture Handicraft competition

மாமல்லபுரம்:

  • தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் பூம்புகார் நிறுவனமானது, மாமல்லபுரம் அரசு கட்டிட, சிற்பக்கலைக் கல்லுாரி மாணவர்களிடம், அடுத்த தலைமுறை கைவினைக் கலைஞர்கள் கைத்திறன் போட்டியை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

  • இந்த போட்டியில் வெற்றி பெரும் மாணவ, மாணவியருக்கு, தலா 2,000 ரூபாய் ரொக்க பரிசு மற்றும் வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்குவது வழக்கம்.

  • 2023-2024-ம் ஆண்டிற்கான போட்டியாக ஓவியம், கற்சிற்பம், மரச்சிற்பம், சுதைச்சிற்பம், உலோக சிற்பம் ஆகிய பிரிவுகளில், 40 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

  • இதில் 25 பேர் கலைத் திறனாளியாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் ராமன், பூம்புகார் நிறுவன மாமல்லபுரம் மேலாளர் வேலு ஆகியோர் போட்டிகளின் செயல்பாட்டை கண்காணித்தனர்.\

Comments


bottom of page