AUSvIND தொடர் மழை 13 ஓவரில் முடிவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம்
- tamil public
- Dec 14, 2024
- 1 min read
டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
போட்டி தொடங்கிய 5 ஓவரில் மழை குறுக்கிட்டது.

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தொடங்கியது. 5 ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால் சிறிது நேரம் ஆட்டம் தடைப்பட்டு மீண்டும் தொடங்கியது. அதனை தொடர்ந்து 13-வது ஓவரில் மீண்டும் மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் உணவு இடைவேளைக்கான நேரம் வந்தது. இடைவேளை நேரம் முடிந்த பிறகும் கூட மழை விட்டபாடு இல்லை. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் முதல் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்தனர்.
#AUS VS IND #Border Gavaskar trophy #Rohit sharma #Tamilpublicnews
Comments