top of page

'அம்பேத்கர் அவமதிப்பு..' பார்லியில் எதிர்க்கட்சி - ஆளுங்கட்சி எம்.பி.க்கள் போட்டி போட்டு போராட்டம்

  • கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்

  • கடந்த நவம்பர் 26 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

Parliament   Ambedhkar
Parliament Ambedhkar
  • கடந்த 17 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

  • இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

  • இதனையடுத்து அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் நேற்று முழுவதும் முடங்கின.

  • பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமித் ஷா , பா.ஜ.க. ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது. * அம்பேத்கரின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை திரித்து கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. AI மூலம் எனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

  • இந்நிலையில், மாநிலங்களவையில் பாபாசாகேப் அம்பேத்கர் குறித்து பேசியதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இன்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • இதில் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அமித் ஷா பதாகைகளை ஏந்தி போராடி வருகின்றனர். கடந்த நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் [ டிசம்பர் 20] முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே காங்கிரஸ் அம்பேத்கரை அவமதித்ததாக பாஜக கூட்டணி எம்பிக்களும் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    #Parliament #Ambedhkar #Tamilpublicnews

Comments


bottom of page