top of page

ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த தினம் - பிரதமர் மோடி வாழ்த்து

  • எங்களை நத்திப் பிழைக்க வந்த நீங்கள்தான் எங்களின் தாய் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டும்

  • விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

Velunachiyar   Sivanganga   Modi
Velunachiyar Sivanganga Modi
  • "எங்களை நத்திப் பிழைக்க வந்த நீங்கள்தான் எங்களின் தாய் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, நாங்கள் உங்கள் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று ஆங்கிலேயர்களிடம் கர்ஜித்த வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த தினம் இன்று [ஜனவரி 3]

  • ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடியவர் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் [1730 -1796]

  • இன்று அவரின் 295 வது பிறந்த தினத்தை ஒட்டி தலைவர்கள் பலர் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

  • அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

  • துணிச்சலான ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன்! காலனித்துவ ஆட்சிக்கு எதிராக அவர் ஒரு வீரப் போராட்டத்தை நடத்தினார், இணையற்ற வீரத்தையும், போர்தந்திர திறமையையும் வெளிப்படுத்தினார்.

  • ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சுதந்திரத்திற்காகவும் போராடப் பல தலைமுறைகளை அவர் ஊக்குவித்தார். பெண்களுக்கு அதிகாரமளித்தலிலும் அவரது பங்கு பரவலாகப் பாராட்டப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். 

    #Velunachiyar #Sivanganga #Modi #Tamilpublicnews

Comments


bottom of page