top of page

சாத்தனூர் அணை நீர் திறப்பு- முதலமைச்சர் விளக்கம்

  • அதிமுக ஆட்சியில் முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது.

  • செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் புகாருக்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தார்.

MK Stalin  Sathanur Dam   Edappadi Palaniswamy
MK Stalin Sathanur Dam Edappadi Palaniswamy
  • சாத்தனூர் அணை திறக்கப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  • 5 வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த பின்பு சாத்தனூர் அணையில் படிப்படியாக நீர் திறக்கப்பட்டது.

  • அதிமுக ஆட்சியில் முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டதால் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

  • செம்பரம்பாக்கம் ஏரியை அரசு யாருக்கும் சொல்லாமல் திறந்துவிட்டது என இந்திய கணக்காய்வு அறிக்கை தெளிவுபடுத்தியது என்று அவர் கூறினார்.

  • இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் புகாருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தார்.

  • பல்வேறு இடங்களில் பெய்த மழைநீர் உபரி அடையாற்றில் கலந்ததால் மட்டுமே வெள்ளம் ஏற்பட்டது என்று அவர் கூறினார்.

  • சாத்தனூர் அணை நீர் திறப்பு, செம்பரம்பாக்கம் அணை நீர் திறப்பு குறித்து முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் விவாதம் நடைபெற்றது.

#MK Stalin #Sathanur Dam #Edappadi Palaniswamy


Comments


bottom of page