top of page

'சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு' கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

  • சர். ஜான் மார்ஷல் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

  • அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரையாற்றுகிறார்.

MK Stalin
MK Stalin

சென்னை:

  • சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக கலையரங்கத்தில் வருகிற 5-ந்தேதி 'சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு' நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

  • மேலும் சர். ஜான் மார்ஷல் சிலைக்கு அடிக்கல் நாட்டியும் 'சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவவியல் ஆய்வு" நூலினை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

  • இந்நிகழ்வில் அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரையாற்றுகிறார்.

  • வரவேற்பு, கருத்தரங்கு நோக்கவுரையை தமிழக அரசின் நிதித்துறை செயலாளரும் தொல்லியல் துறை ஆணையருமான உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், தலைமையுரை - தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். 

Comments


bottom of page