top of page

சம்பள உயர்வு கோரி.... திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி தூய்மை பணியாளர்கள் `திடீர்' போராட்டம்

  • 14 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்.

  • நிர்ணயித்த கூலியை வழங்க வேண்டும்.

Sanitation workers    Protest
Sanitation workers Protest

திருப்பூர்:

  • திருப்பூர் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனையில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஏராளமானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழி லாளர்களுக்கு தினக்கூலியாக மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு தொகை வழங்க அறிவுறுத்தி உள்ளது.

  • அதன்படி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்து வருகிற தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலாளிகள் ஆகியோருக்கு நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ.725 வழங்க வேண்டும். ஆனால் ரூ.534 மட்டுமே வழங்கப்படுவதாக தெரிகிறது.

  • இதனால் நிர்ணயித்த கூலியை வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ., பி.எப்., உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும், 14 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் இன்று காலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் -காவலாளிகள் உட்பட பலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Comments


bottom of page