ஞாயிறு விடுமுறையை யொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
- tamil public
- Dec 1, 2024
- 1 min read
நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
3-வது நாளாக இன்றும் கடல் உள்வாங்கி காணப்பட்டது
Thiruchendhur Temple திருச்செந்தூர்:.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பரிகார பூஜைகள் செய்து செல்கின்றனர்.
இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை தினம் என்பதாலும், கார்த்திகை மாதம் என்பதாலும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருவதால் கோவில் கடற்கரை, கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.
ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு வழக்கம்போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
இதற்கிடையே அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் முதலே கடல் உள்வாங்கி காணப்பட்டது. நேற்று 2-வது நாளாக சுமார் 80 அடி வரை கடல் உள்வாங்கி இருந்ததது. இந்நிலையில் 3-வது நாளாக இன்றும் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடற்பாசிகள் வெளியே தெரிந்தது.
#Thiruchendur Temple #Spirituality
Comments