top of page

தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் : அண்ணாமலை

  • நாளை முதல், திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன்.

  • 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். முருகப்பெருமானிடம் முறையிட போகிறேன்.

Annamalai university     BJP Leader
Annamalai university BJP Leader
  • மாணவி பாலியல் வழக்கில் எப்ஐஆர் எப்படி வெளியே வந்தது. பாதிக்கப்பட்ட மாணவி குற்றம் செய்தது போல எப்ஐஆர் எழுதியுள்ளார்.

  • எப்ஐஆரில் அதிக ஆபாச வார்த்தைகள் உள்ளன, இப்படியெல்லாம் எப்ஐஆர் போடுவார்களா ?

  • பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி முழுவதையும் போலீசார் வெளியிட்டதற்கு திமுகவினர் வெட்கப்பட வேண்டும்.

  • பாதிக்கப்பட்ட பெண்மை அவமானப்படுத்தும் நோக்கத்தில் எப்ஐஆர் வௌியிடப்பட்டுள்ளது.

  • இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன். இந்த அரசியலாகாது, மாநிலத் தலைவராக தொண்டராக ஒரு சபதம் எடுத்துள்ளேன்.

  • இனிமேல் ஆர்ப்பாட்டம் கிடையாது. நாளை முதல் வேறு மாதிரியாக தான் டீல் செய்வோம்.

  • நாளை காலை 10 மணிக்கு என் வீட்டின் முன்பு என்னை நானே சாட்டையால் 6 முறை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளேன்.

  • நாளை முதல், திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்.

  • 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். முருகப்பெருமானிடம் முறையிட போகிறேன்.

  • நாளை முதல் எனது அரசியல் வேறு மாதிரி இருக்கும். ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம், மரியாதை எல்லாம் இருக்காது.

  • எதற்கு அரசியல் கட்சியினருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இனி மரியாதையெல்லாம் கிடையாது.

  • சாதாரண மனிதர்களின் பிரச்சினைகளை பேச வேண்டும். அவர்கள் இல்லாமல் அரசியல் கிடையாது.

  • கை உடைந்தது, கால் உடைந்தது எல்லாம் ஒரு தண்டனையா ? அரசியலுக்கு வந்ததால் அடங்கி உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்.

  • அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி வேலை செய்யவில்லை என்று கூறுகிறார்கள். நிர்பயா நிதி எங்கே சென்றது ?

    #Annamalai university #BJP Leader #Tamilpublicnews

Comments


bottom of page