திருப்பூரில் பொங்கல் திருவிழா: வெள்ளை சேலை அணிந்து சுமங்கலிப் பெண்கள் நேர்த்திக்கடன்
- tamil public
- Jan 9
- 1 min read

மங்கலம்:
திருப்பூர் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட நடுவேலம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில் ஒரே வளாகத்தில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழாவானது கடந்த 31-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் மாரியம்மன், பட்டத்தரசியம்மனுக்கு அலங்கார பூஜைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சக்தி கும்பம், சக்தி கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் நடுவேலம்பாளையம், லட்சுமிநகர் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திரளான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். சுமங்கலிப்பெண்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற வெள்ளை நிற சேலை அணிந்து வந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், சுமங்கலி பெண்கள் அம்மனை நினை த்து வெள்ளை சேலை அணிந்து வீடு தோறும் மடிப்பிச்சை எடுத்து கோவிலில் செலுத்தினால் அவர்கள் நினைத்த காரியம் ஒரு வருடத்தில் நிறைவேறும். இதனால் சுமங்கலி பெண்கள் பலர் வெள்ளை சேலை அணிந்து வழிபாடு நடத்துகின்றனர் என்றனர்.
#Thiruppur #Pongal celebration #Tamilpublicnews






Comments