top of page

நாளை உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி- வரும் 17, 18ம் தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்

  • பருவமழை நேற்று வழக்கத்தை விட 14 சதவீதம் அதிகமாக இருந்தது. இன்று 32 சதவீதமாக உள்ளது.

  • வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 54 செ.மீ. பெய்துள்ளது.

Chennai heavy rain  Meteorological department
Chennai heavy rain Meteorological department
  • சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

  • அப்போது, இதுவரை நாட்களில் பெய்த பருவ மழை குறித்தும், இனி மேல் பெய்யும் மழை குறித்தும் அவர் விவரித்தார்.

  • இதுகுறித்து அவர் கூறியதாவது:-

  • தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

  • அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

  • கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

  • மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி லட்சத்தீவு பகுதியில் நிலவுகிறது.

  • நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது.

  • பருவமழை நேற்று வழக்கத்தை விட 14 சதவீதம் அதிகமாக இருந்தது. இன்று 32 சதவீதமாக உள்ளது.

  • வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 54 செ.மீ. பெய்துள்ளது.

  • வரும் 17,18ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது

    #Chennai heavy rain #Meteorological department

Comments


bottom of page