பெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழக அரசு
- tamil public
- Jan 4
- 1 min read
புயல் மற்றும் கனமழையால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
இந்த அறிவிப்பு மூலம் பேரிடர் நிதி மட்டுமல்லாமல் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடியும்.

வங்கக்கடலில் உருவாகிய பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பேரிடர் நிதி மட்டுமல்லாமல் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடியும்.
புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களுக்கு 2 ஆயிரம் வழங்கப்பட்டது. புயலால் பாதிப்பு சீரமைப்புக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments