top of page

புதுச்சேரியில் மீட்பு பணியில் களம் இறங்கிய இந்திய ராணுவம்

  • புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை காரிசன் பட்டாலியன் இந்திய ராணுவ படையினர் இன்று புதுச்சேரி வந்தனர்.

  • புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

Fenjal Rain
Fenjal Rain

புதுச்சேரி:

  • புதுச்சேரியில் புயல் காரணமாக நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

  • நகரே வெள்ளக்காடாக மாறி உள்ளது. இதையடுத்து புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை காரிசன் பட்டாலியன் இந்திய ராணுவ படையினர் இன்று புதுச்சேரி வந்தனர்.

  • மேஜர் அஜய் சங்வான் தலைமையில்ஆறு ஜூனியர் அதிகாரிகள் மற்றும் 62 இதர ரேங்குகளை உள்ளடக்கிய பேரிடர் நிவாரண ராணுவ குழுவினர் புதுச்சேரியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. சுமார் 5 அடி வரை தண்ணீர் இருப்பதால் அந்த பகுதியில் தற்போது மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். சுமார் 100 பேர் வரை மீட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவித்தனர்

#Fenjal # Rain


Comments


bottom of page