top of page

பெரியாரின் கைத்தடியை பரிசாக பெற்றது பெரும் பேறு- மு.க.ஸ்டாலின்

  • பெரியார் திடலுக்கு வந்தது எனது தாய் வீட்டிற்கு வந்ததை போன்றது.

  • 90 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார் ஆசிரியர் வீரமணி.

MK Stalin  Thanthai periyar
MK Stalin Thanthai periyar
  • சென்னை பெரியார் திடலில் பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'பெரியார் கைத்தடி' போன்ற நினைவு பரிசை திராவிட கழகத் தலைவர் வீரமணி வழங்கினார்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* பெரியாரின் கைத்தடியை பரிசாக பெற்றது பெரும் பேறு.

* திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்வோருக்கு இந்த கைத்தடி ஒன்றே போதுமானது.

* பெரியார் திடலுக்கு வந்தது எனது தாய் வீட்டிற்கு வந்ததை போன்றது.

* ஒற்றுமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் அயராது போராடியவர் தந்தை பெரியார்.

* பேச, எழுத, பத்திரிகை, போராட்டத்திற்கு தடை, கோவிலுக்குள் செல்ல தடை என அத்தனை தடைகளை உடைத்தவர் பெரியார்.

* தமிழினம் சுயமரியாதை பெறுவதற்கு வாழ்நாளெல்லாம் உழைத்தவர் பெரியார்.

* 90 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார் ஆசிரியர் வீரமணி.

* ஆசிரியர் வீரமணி இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் இருந்து எங்களை போன்ற இளைஞர்களுக்கு ஊக்கம் தர வேண்டும்.

* ஆசிரியர் வீரமணியை பெரியாரின் தொண்டனாக வாழ்த்துகிறேன் என்று கூறினார்.



Comments


bottom of page