top of page

மூளைசாவு அடைந்த இலங்கை அகதியின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேர் பயனடைந்தனர்

  • புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்ற போது பைக் விபத்து.

  • கிட்னி, கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் இரு கண்கள் தானம்.

Pudhucherry     Sri lanka relugee    Organ donation
Pudhucherry Sri lanka relugee Organ donation

புதுச்சேரி:

  • புதுச்சேரி அருகே தமிழக பகுதியான கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் விஜய குமார். இவரது மகன் பிரேம்குமார் (வயது19) இவர் கடந்த 31-ந் தேதி இரவு 10 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனது கே.டி.எம். டியூக் பைக்கில் புதுச்சேரிக்கு புறப்பட்டார்.

  • காலாப்பட்டு, பிள்ளைச் சாவடி இ.சி.ஆர். சாலையில் உள்ள பள்ளத்தில் பைக் இறங்கியதில் பிரேம்குமார் நிலை தடுமாறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

  • உடனே அவரை அங்கி ருந்தவர்கள் மீட்டு, பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மூலக்குளம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மூளைச் சாவு அடைந்தார்.

  • அதனால் அவரது உடல் உறுப்புகளான கிட்னி, கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் இரு கண்களை தானம் கொடுக்க அவரது பெற்றோர் முன்வந்தனர்.

  • அதனைத் தொடர்த்து, 5 உறுப்புகளும் அந்த மருத்து வமனை டாக்டர் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. ஒரு கிட்னி அதே மருத்துவமனையில் பெறும் சிகிச்சை 47 வயது நபருக்கு பொருத்த கொண்டு செல்லப்பட்டது.

  • மற்றொரு கிட்னி இந்திரா காந்தி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் 24 வயது பெண்ணிற்கு பொருத்துவதற்கு கொண்டு செல்லப்பட்டது.

  • கல்லீரல் கிருமாம்பாகம் மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 59 வயது ஆண் நபருக்கு பொருத்துவதற்காக கொண்டு செல்லப் பட்டது. இரு கண்கள் தவளக்குப்பம் அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் டன.

  • இந்த உடல் உறுப்புகள் ஆம்புலன்சில் கொண்டு செல்லும் சிக்னல்கள் மற்றும் சாலைகளில் போலீசார் நிறுத்தப்பட்டு அதிவிரைவாக அந்தந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • இறந்த வாலிபர் பிரேம்குமாரால், 7 பேருக்கு உடல் உறுப்பு தானம் கிடைக்கப் பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#Pudhucherry # Sri lanka relugee #Organ donation #Tamilpublicnews

Comments


bottom of page