top of page

திருவண்ணாமலையில் மகாதீபம் நிச்சயம் ஏற்றப்படும்- அமைச்சர் உறுதி

  • முதல்வர் உத்தரவுப்படி கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடத்தப்படும்.

  • . காலங்காலமாக நடத்தப்பட்டு வரும் திருவண்ணாமலை தீபத்திருவிழா இந்தாண்டும் சிறப்பாக நடத்தப்படும்.

Thiruvanamalai Temple   Minister Sekar Babu   Karthigai Deepam
Thiruvanamalai Temple Minister Sekar Babu Karthigai Deepam
  • தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரம் தொடங்கியதும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

  • இந்நிலையில் கார்த்திகை தீபத்திருவிழா நாளில் திருவண்ணாமலை உச்சியில் நிச்சயம் மகா தீபம் ஏற்றப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுதியாக தெரிவித்தார்.

  • இது தொடர்பாக அவர் கூறுகையில்,

  • எவ்வித சிறு அசம்பாவிதமும் இன்றி திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

  • முதல்வர் உத்தரவுப்படி கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடத்தப்படும்.

  • காலங்காலமாக நடத்தப்பட்டு வரும் திருவண்ணாமலை தீபத்திருவிழா இந்தாண்டும் சிறப்பாக நடத்தப்படும். இந்தாண்டும் எந்தவித தடையும் இன்றி மலையின் உச்சியில் தீபம் எரியும்.

  • நெய், கொப்பரையை மலைக்கு மனித சக்தியை பயன்படுத்தி கொண்டு செல்லப்பட்டு, சிறு உயிரிழப்பும் இன்றி தீபத்திருவிழா நடத்தப்படும். பக்தர்களை பயன்படுத்தி 350 கிலோ எடை கொண்ட கொப்பரை, 4.5 டன் நெய் மலை உச்சிக்கு எடுத்து செல்லப்படும்.

#Thiruvanamalai Temple #Minister Sekar Babu #Karthigai Deepam
















Comments


bottom of page