top of page

பரமபத வாசல் திறப்பை காண முதலில் விண்ணப்பிக்கும் 500 பேருக்கு அனுமதி இலவசம்- அமைச்சர் சேகர்பாபு

  • பரமபதவாசல் திறப்பை காண்பதற்கு ஒரு நபருக்கு ரூ.500 என 1,500 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.

  • கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழி அமைத்து சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Parthasarathy temple    Minister sekar babu
Parthasarathy temple Minister sekar babu

சென்னை:

  • சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பை காண முதலில் விண்ணப்பிக்கும் 500 பேருக்கு அனுமதி இலவசம்.

  • பரமபத வாசல் திறப்பை காண்பதற்கு ஒரு நபருக்கு ரூ.500 என 1,500 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.

  • மதியம் 2 மணி முதல் 4 மணி வரை கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழி அமைத்து சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

Comments


bottom of page